நீர் நாய்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை
2022-01-22@ 12:58:58

மன்னார்குடி : வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி பட்டியல் விலங்காக வகைப்படுத்த பட்டுள்ளதாலும், பாலூட்டி விலங்கு வகையை சேர்ந்த அழிந்து வரும் ஒரு உயிரினமாகவும் நீர் நாய்கள் விளங்குவதால் அவற்றை துன்புறுத்துவோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்ட வன அலுவலர் டாக்டர் அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : திருவாரூர் மாவட்டம் வடுவூரில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள ஏரி, கண்ணனாறு -பாமணியாறு ஒன்றாக கலக்கும் செருகளத்தூர், திருவாரூர் அடுத்த தேவநதி, ஓடாச்சேரி மற்றும் நன்னிலம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆறுகள் மற்றும் ஈர நிலங்களில் அரியவகை நீர் நாய்கள் தென்படுகின்றன.
நீர்நாய் பாலூட்டி விலங்கு வகையை சேர்ந்த அழிந்து வரும் ஒரு உயிரினமாகும். மிகவும் தட்டை போன்ற கால்களை உடையது. மீன்கள் அதிகளவில் வசிக்கும் இடங்களில் வாழும். உயிர்ச்சூழல் மண்டலத்தில் நீர் நாய்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. நீர்நாய்கள் கூச்ச சுபாவம் கொண்டவை யாக இருப்பதால் மனிதர்களை கண்டால் ஒளிந்து கொள்ளும் தன்மை கொண்டது.
அழிவின் பிடியில் உள்ள நீர் நாய்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்.
1972ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நீர் நாய்கள் பட்டியல் விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீர் நாய்களை எவரேனும் துன்புறுத்துவது அல்லது அச்சுறுத்துவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட வன அலுவலர் டாக்டர் அறிவொளி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
ஆவடி அமமுக செயல்வீரர்கள் கூட்டம்; ஓபிஎஸ்சை ரகசியமாக சந்திக்க அவசியம் இல்லை.! டிடிவி.தினகரன் பேட்டி
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்; முத்தரசன் எச்சரிக்கை
மணப்பாறை நீதிமன்றத்தில் தொந்தரவு கொடுத்து வந்த குரங்குகள் கூண்டில் சிக்கின-பணியாளர்கள், பொதுமக்கள் நிம்மதி
துறையூர் அடுத்த பச்சைமலையில் மரவள்ளிக்கிழங்கு, முந்திரி சாகுபடி குறைவால் வாழ்வாதாரம் பாதிப்பு-மழைவாழ் மக்கள் வேதனை
திருப்பத்தூர் மாவட்டத்தில் ₹7 கோடியில் 6 கோயில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யும் பணிகள் தீவிரம்-இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தகவல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!