லாரி மோதியதில் 52 ஆடுகள் உயிரிழப்பு: நஷ்ட ஈடு கோரி ஆட்டின் உரிமையாளர்கள் சாலை மறியல்
2022-01-22@ 12:36:37

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பறையங்குளம் கிராமத்தில் சாலையில் வந்த லாரி மோதியதில் முனியசாமி என்பவருக்கு சொந்தமான 52 ஆடுகள் உயிரிழந்தன. இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு கோரி முனியசாமி உறவினர்கள் ஆடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு காவடிபட்டி என்ற இடத்தில் பறையங்குளம் முனியசாமி என்பவரின் ஆடுகள் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 40 ஆடுகள் உயிரிழந்தன. பின்னர் படிப்படியாக 12 ஆடுகள் உயிரிழந்தன.
இந்த சம்பவம் குறித்து கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் ஆடுகளுக்கு நஷ்ட ஈடு எதுவும் வழங்கவில்லை என முனியசாமி தரப்பினர் இன்று காலை 10 மணியளவில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக கமுதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் நஷ்ட ஈடு பெற்று தருவதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் கமுதி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
அதிமுக பொதுக்குழுவில் பெரும் தொகை பட்டுவாடா: எடப்பாடிக்கு மெஜாரிட்டி கிடைத்த ரகசியத்தை அம்பலபடுத்தினார் புதுச்சேரி மாநில செயலாளர்
கைதி மாயம்: சேலம் சிறை அதிகாரியிடம் 3 மணி நேரம் விசாரணை
கூட்டுறவுத்துறையில் அதிமுக ஆட்சியில் ரூ780 கோடி முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
ரூ700 கோடி நில மோசடி வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படை
நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் தவித்த இலங்கை டாக்டருக்கு உதவிய திருச்செந்தூர் போலீஸ்காரர்: பாராட்டு குவிகிறது
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் காத்திருப்பு போராட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்