சீர்காழியில் குளத்தை ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு-தூர்வார மக்கள் கோரிக்கை
2022-01-22@ 12:29:31

சீர்காழி : சீர்காழியில் குளத்தை ஆக்கிரமித்த ஆகாய தாமரை செடிகளை அகற்றி தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி சாலையோரத்தில் உள்ளது டிடி.பிள்ளை குளம். இக்குளம் தொடர் மழையின் காரணமாக தற்போது முழு அளவில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் தென்பாதி சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தென்பாதி பகுதியின் நீர் ஆதாரமாக விளங்கும் இக்குளத்தில் தற்போது முழுவதுமாக ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் தண்ணீரில் சூரிய ஒளி படாமல் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாகவும், தண்ணீர் குடிக்கச் செல்லும் நாய்கள் தவறி விழுந்து மீண்டு வரமுடியாமல், இதுவரை 5க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்துள்ளதாக தெரிகிறது. மேலும் குளத்தில் முழு அளவில் தண்ணீர் இருந்தும் யாரும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு அரசு பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மின் தகன மேடை அமைக்க நிதியுதவி
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
திருக்கழுக்குன்றத்தில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மறைவு
மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது
செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!