இரண்டாம் உலகப் போருக்கு பின் கொரோனாவுக்கு எதிராக யுத்தம்-நெல்லை கலெக்டர் விஷ்ணு பேச்சு
2022-01-22@ 12:04:46

நெல்லை : இரண்டாம் உலகப் போருக்கு பின்பு கொரோனாவை எதிர்த்து போரிடுவதாக நெல்லையில் நடந்த சுகாதாரப் பேரவை கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:
தமிழக அரசு சுகாதார தரத்தை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட சுகாதார பேரவையின் மூலம் அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதாரம் சம்பந்தமான தேவைகளை கண்டறிதல், நிவர்த்தி செய்தல், மேலும் துறைக்கும், சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துதல், அனைத்து பகுதிகளிலும் முறையான சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்க செய்தல் ஆகியவை முக்கிய நோக்கமாகும்.
உலகம் முழுவதும் சுகாதாரம் காரணமாக அசாதாரண சூழல் நிலவுகிறது. சுகாதாரம் என்ற ஒரு துறை பாதிக்கப்பட்டால், கல்வி, பொருளாதாரம், வளர்ச்சி உலக அளவில் பெரிதும் பாதிக்கப்படும். கொரோனா காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகமே கொரோனாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சுகாதார திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன்முறையாக இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தான் அதிக மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. நெல்லை மாவட்டம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மையமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரும், நெல்லைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னமும் தொடர்ந்து வருகிறது. 2வது அலையை எளிதில் கட்டுப்படுத்தினோம். 3வது அலையை சந்திப்பதற்கான அனைத்து உள்கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன. இனி அடுத்த அலை வருமா? என்று தெரியாது. எதற்கும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் வெங்கட்ரங்கன், துணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணலீலா, மருத்துவக்கல்லூரி பேராசிரியை சுமதி மற்றும் சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.
அரசு மருத்துவமனைகளில் 51 சதவீதம் பிரசவம்
கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணலீலா பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் மொத்தம் 17 ஆயிரத்து 657 பிரசவங்கள் நடந்துள்ளன. இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 915, அரசு மருத்துவமனைகளில் 1,691, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 ஆயிரத்து 561 என மொத்தம் 51.62 சதவீதம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 8 ஆயிரத்து 490 பிரசவங்கள் நடந்துள்ளன. இது 48 சதவீதம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
சேலம் ஜங்ஷன் அருகே குறுகலான ரயில்வே தரைப்பாலம் 10 மணி நேரத்தில் மாற்றியமைப்பு: இன்னும் பாதியளவு பாலத்தை சீரமைக்க ஏற்பாடு
தர்மபுரியில் அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து: 24 பேர் படுகாயம்
வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக வீடு இடிந்து சேதம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!