பரமக்குடியில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலை: ஆன்லைனில் பதிவு செய்து 20 நாட்கள் ஆகியும் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை
2022-01-22@ 10:35:34

இராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்துக்கிடக்கின்றனர். பரமக்குடி சுற்றுவட்டார கிராமங்களான கள்ளிக்குடி, கொத்தங்குளம், பி.புத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடர்மழை பெய்ததின் விளைவாக ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இருமடங்கு அதிகமாக சுமார் 5,000 ஹெக்டரில் நெல்சாகுபடி செய்யப்பட்டது. ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டைகள் வரை நெல் விளைச்சல்கள் கிடைத்துள்ளது. ஆனால் ஆன்லைனில் பதிவு செய்து 20 நாட்கள் ஆகியும் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மூட்டைகளுடன் விவசாயிகள் இரவு, பகலாக காத்திருக்கின்றனர்.
கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடன் பெற்று பெரும்பாலான விவசாயிகள் நெல்சாகுபடியில் ஈடுபட்டுள்ள நிலையில் இதுவரை நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனையுடன் காத்திருக்கின்றனர். நெல்மூட்டைகள் மீது வைக்கோலை பரப்பி இரவு, பகலாக சுழற்சி முறையில் காத்திருக்கும் விவசாயிகள் திடீரென மழை பெய்ய நேர்ந்தால் பாடுபட்டு அறுவடை செய்த நெல்மூட்டைகள் சேதமடையும் என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர். உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கோவை, அருப்புக்கோட்டையில் வருமானவரித்துறை அதிரடி
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோலாகலம்: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
கடந்த அதிமுக ஆட்சியில் 2015ல் கட்டப்பட்டது அரசுப்பள்ளி மேற்கூரை விழுந்து 3 மாணவர்கள், ஆசிரியர் காயம்: தண்டராம்பட்டு அருகே பரபரப்பு
பெற்றோருக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை: ஓசூர் போலீசார் விசாரணை
கோவையில் ருசிகரம் துவக்கப்பள்ளியில் மாணவர் தேர்தல்
ஆர்டிஐயின் கீழ் ஆதீனங்கள் வராது: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!