அமெரிக்காவில் நுழைய முயற்சி கனடா நாட்டு எல்லையில் 4 இந்தியர்கள் உறைந்து பலி
2022-01-22@ 00:12:48

நியூயார்க்: கனடா நாட்டு எல்லையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்தியர்களில், குழந்தை உள்பட 4 பேர் பனியால் உறைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.இது குறித்து கனடா போலீசார் கூறுகையில், `அமெரிக்கா-கனடா எல்லையில் எமர்சன் பகுதி அருகே இந்தியாவை சேர்ந்த ஆண், பெண், இளைஞர், குழந்தை என 4 பேர் எல்லையை சட்ட விரோதமாக கடந்ததாக அமெரிக்க எல்லை பாதுகாப்பு போலீசார் தெரிவித்தனர்.
அப்பகுதிக்கு சென்று தேடிய போது, அவர்கள் அனைவரும் 9 முதல் 12 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து இறந்து கிடந்தனர். முதல் கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் கடுங்குளிரில் 11 கிமீ தூரம் நடந்து வந்ததால், பனியில் உறைந்து இறந்திருப்பது தெரிய வந்துள்ளது,’ என்று தெரிவித்தனர்.இந்நிலையில், இந்த இந்திய குடும்பத்தினர் அமெரிக்காவில் நுழைவதற்கு உதவிய அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் என்பவர், ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாமல் ரஷ்யா தவிப்பு!: 104 ஆண்டுகளில் முதன்முறையாக அன்னியச் செலவாணி இன்றி திவால் நிலை..!!
பாக். முன்னாள் பிரதமர் உயிருக்கு ஆபத்து?: இம்ரான்கான் இல்லத்தில் உளவு பார்க்க உதவிய காவலாளி கைது..!!
தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் 22 சிறுவர்கள் பலி: மது குடித்த போது மயங்கி விழுந்ததாக காவல்துறை தகவல்..!
எரிபொருட்கள் விலையேற்றம் எதிரொலி!: இலங்கையில் உணவு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு.. மக்கள் கடும் அவதி..!!
ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் அழிவுப்பாதை: கைவிடப்பட்ட பருவநிலை கொள்கை; திறக்கப்படும் நிலக்கரி சுரங்கங்கள்
ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 தடை
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!