தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா
2022-01-22@ 00:12:36

பார்ல்: போலண்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 55 ரன் (79 பந்து, 4 பவுண்டரி), தவான் 29 ரன், கோஹ்லி 0, ரிஷப் பன்ட் 85 ரன் (71 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), ஷ்ரேயாஸ் 11, வெங்கடேஷ் 22 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
ஷர்துல் 40 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), அஷ்வின் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்து வென்றது. டி காக் 78 ரன், ஜானிமன் மலான் 91 ரன், கேப்டன் தெம்பா பவுமா 35 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். மார்க்ரம் 37 ரன், வாண்டெர் டஸன் 37 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா 2-0 என தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி கேப் டவுனில் நாளை நடக்கிறது.
மேலும் செய்திகள்
3வது டெஸ்ட்டிலும் இங்கி. வெற்றி முகம்; ஒயிட்வாஷ் பரிதாபத்தில் உலக சாம்பியன் நியூசிலாந்து
தொடரை வெற்றியுடன் தொடங்குவது சிறப்பானது; இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி
சில்லி பாயின்ட்...
ரோகித்துக்கு கொரோனா
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ம.பி. முதல் முறையாக சாம்பியன்: பைனலில் மும்பையை வீழ்த்தியது
3வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 296 ரன் இலக்கு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!