திருப்புத்தூர் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி
2022-01-21@ 19:25:46

திருப்புத்தூர்: திருப்புத்தூரில் உள்ள மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்களை இன்று அதிகாலை உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் உள்ள மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்கள், ரசாயனம் தடவிய மீன்கள், அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ்ஆப் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனயைடுத்து திருப்புத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன் தலைமையில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இன்று அதிகாலை திருப்புத்தூரில் புதுக்கோட்டை சாலையில் உள்ள மீன் மார்க்கெட் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
6 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் சுமார் 20 கிலோ கெட்டுப்போன மீன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. ெகட்டு போன மீன்கள், ரசாயனம் தடவிய மீன்கள், அழுகிய மீன்களை விற்பனை செய்யக்கூடாது, அப்படி விற்பனை செய்தால் மீன்களை பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
மேலும் செய்திகள்
கொந்தகை அகழாய்வில் அடுத்தடுத்து கிடைக்கும் முதுமக்கள் தாழிகள்
திருவலம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே பழுதான இரும்பு பாலம் சீரமைப்பு பணி தீவிரம்
விராலிமலையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்; 800 காளைகள் சீறி பாய்ந்தன
ஓசூர் பகுதியில் மழைநீரில் நனைந்து 50 டன் வெங்காயம் அழுகி சேதம்: பல லட்ச ரூபாய் நஷ்டமானதால் விவசாயிகள் வேதனை
தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலான நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கப்படும்; அமைச்சர் எ.வ.வேலு தகவல்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணை..!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!