வாகன சோதனையில் 40 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது
2022-01-21@ 19:18:02

கமுதி: கமுதி அருகே, 40 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக இருவரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள வங்காருபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அபிராமம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஆட்டோவில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வீரசோழன் கிராமத்தை சேர்ந்த கபூர்முகமது மகன் அப்துல்ரஹீம்(33), நைனார்முகமது மகன் முகமதுபரூக் என்பதும், அபிராமத்திலிருந்து, பார்த்திபனூருக்கு 40 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்த முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரூ.46,900 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
எலக்ட்ரீசியனை தாக்கி நகை, கார் கொள்ளை வழக்கு வாகன சோதனையில் தனிப்படையினரிடம் சிக்கிய 5 பேரில் ஒருவர் தப்பியோட்டம்-பெரம்பலூரில் பரபரப்பு
பள்ளிகொண்டா டோல்கேட்டில் போலீஸ் சோதனை பெங்களூருவில் இருந்து லோடு ஆட்டோவில் கடத்திய ₹5.70 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்-2 பேர் அதிரடி கைது: டிரைவர் தப்பியோட்டம்
சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட ₹32 லட்சம் மதிப்பு டூவீலர் உதிரி பாகங்களுடன் மினிலாரியை கடத்திய வாலிபர் அதிரடி கைது-வாணியம்பாடியை சேர்ந்தவர்
சேலம் 5 ரோட்டில் துணிகரம் அடுத்தடுத்த 3 கடைகளின் மேற்கூரையை உடைத்து திருட்டு-மர்ம நபருக்கு வலை
மாறி மாறி வெட்டி கொண்ட தந்தை, மகன்: மதுகுடிப்பதை தட்டி கேட்டதால் தகராறு
வாலிபருக்கு சரமாரி அடி: 2 பேர் கைது
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!