உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?.. பிரியங்கா காந்தி சூசகம்..!
2022-01-21@ 17:07:51

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பிரியங்கா காந்தி என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பின்னர் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர பல்வேறு வியூகங்களைச் செயல்படுத்த தொடங்கியுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத பாஜகவின் ஆதித்தனாத்தும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் போட்டியட உள்ளனர்.
கோரக்பூர் தொகுதியில் பாஜக முதல்வர் யோகி ஆதித்தனாத்தும், கர்ஹல் தொகுதியில் அகிலேஷ் யாதவும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பிரியங்கா காந்தி என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். காங்கிரசின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற நிருபரின் கேள்விக்கு என்னை தவிர வேறு யாரும் தெரிகிறார்களா என பிரியங்கா கூறியுள்ளார். மீண்டும் நிருபர் விடாமல் கேட்டதற்கு'எனது முகம் தெரிகிறது அல்லவா?' என்று பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது கட்சியால் அறிவிக்கப்படாத நிலையில் பிரியங்கா காந்தி பதிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உ.பி. சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரசின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கூட்டாக வெளியிட்டனர்.
மேலும் செய்திகள்
அக்னிபாதை திட்டத்தில் 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம்; இந்திய விமானப்படை தகவல்.! ஜூலை 5ம் தேதி கடைசி நாள்
காரில் வைத்து நடந்த கொடூரம்: உ.பி.யில் தாய், மகள் பலாத்காரம்
விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது: யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு
தொழில்நுட்ப பயன்பாட்டில் குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: அமித் ஷா
ஜூலை 11 மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
மகாராஷ்டிராவில் முற்றும் மோதல்; ‘மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்’.! ஒன்றிய உள்துறை செயலாளருக்கு கவர்னர் கோஷ்யாரி கடிதம்
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!