தடுப்பூசி செலுத்தியதால் 3ஆம் அலையில் பாதிப்புகள் குறைவு - ஒன்றிய சுகாதாரத்துறை செயலர்
2022-01-21@ 14:52:03

டெல்லி: தடுப்பூசி செலுத்தியதால் கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் குறைந்திருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆசிய முழுவதுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 வாரங்களில் அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவிலும் அதே உயர்வு உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு, மராட்டியம், கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் வேகம் கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார். இந்த 6 மாநிலங்களுடன் குஜராத், ஒடிசா, டெல்லி, ராஜஸ்தான் என 10 மாநிலங்களில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிக்கூடங்களை திறக்க மராட்டிய மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவு பள்ளிகளுக்கு அனுப்பு வைக்கப்படும் என்று அந்த மாநில கல்வி அமைச்சர் வர்ஷா ஏக்நாத் கேவாக் தெரிவித்துள்ளார். தொற்று பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் மழலையர் பள்ளிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:
கொரோனாமேலும் செய்திகள்
ஜூலை 11 மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
மகாராஷ்டிராவில் முற்றும் மோதல்; ‘மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்’.! ஒன்றிய உள்துறை செயலாளருக்கு கவர்னர் கோஷ்யாரி கடிதம்
இடைத்தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர்; ஜே.பி.நட்டா மகிழ்ச்சி
தங்கக் கடத்தலில் பினராயி விஜயனுக்கு தொடர்பு என முழக்கம்: கூச்சல் குழப்பத்தால் கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பத்ரா குடியிருப்பு மோசடி விவகாரம்!: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!
சிறுவன் தண்ணீர் குடித்ததில் தகராறு இருபிரிவினர் பயங்கர மோதல்-விஜயநகரம் மாவட்டத்தில் பரபரப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!