கால்நடை தீவனத்திற்கு இயந்திரம் மூலம் வைக்கோல் சேகரிப்பு
2022-01-21@ 14:14:57

திருவாடானை : திருவாடானை பகுதியில் தீவனத்திற்காக இயந்திரம் மூலம் வைக்கோல் சேகரிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் திருவாடானை தாலுகாவில் நெல் சாகுபடி அதிகளவு செய்யப்படுகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் ஆடு,மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இப்பகுதியில் கறவை மாடுகள் வேளாண் தொழிலுக்கு, இணை தொழிலாக செய்து வருவதால் அதற்கு தேவையான தீவனம் சேகரிக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
இதனால் இப்பகுதியில் விளையும் நெல் அறுவடை முடிந்ததும் அந்த வைக்கோலை மாடுகளுக்கு தீவனமாக விவசாயிகள் சேகரித்து வைத்துக் கொள்வார்கள். முன்பெல்லாம் கூலியாட்களை வைத்து வைக்கோலை சேகரித்து ஒரு வருடத்திற்கு மேல் சேமித்து வைத்திருப்பார்கள். இப்போது ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக இயந்திரம் மூலம் வயல்களில் உள்ள வைக்கோலை ஒவ்வொரு கட்டுகளாக சுருட்டி கட்டி வைத்து பின்பு லாரியில் ஏற்றி கால்நடை தீவனங்கள் கொண்டு செல்கின்றனர். மேலும் வெளியூர்களுக்கும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அறுவடை நடந்து வரும் இந்த நிலையில் மழை பெய்தால் வைக்கோல் வீணாகி விடும் என்ற அவசரத்தில் இயந்திரம் மூலம் வைத்து வைக்கோலை சேகரிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை
நெல்லையில் முதல் குறைதீர் கூட்டம் ஊர்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலை: கலெக்டர் தகவல்
பைக் புதையும்படி சாலை உதவி பொறியாளர் சஸ்பெண்ட்
தமிழகம் முழுவதும் 2.50 கோடி மரக்கன்றுகள் நடப்படும்: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் 235 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!