அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை: விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: டிஜிபி எச்சரிக்கை
2022-01-21@ 09:57:37

சென்னை: ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினரகள், பொதுத்துறை உறுப்பினர் அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறைக்கு கடந்த 5-ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஒன்றிய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அரசு சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், ஓய்வு பெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் தங்களின் வாகனம், லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டுகளில் அரசுகளின் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளார். அரசு விதிகளின்படி முக்கிய நபர்கள், அதிகாரிகளை தவிற மற்றவர்கள் அரசு சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோர் வாகனங்களை சாட்களின் முன்னிலையில் போலீசாா் பறிமுதல் செய்வதோடு அதை வீடியோ பதிவும் செய்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்
வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் விழிப்புணர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 13 பின்பிரிவு உதவி பொறியாளர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு
சென்னையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொடரும் பேச்சுவார்த்தை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ120.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
204-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை
பணியிடத்தில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!