காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி: எஸ்பி துவங்கி வைத்தார்
2022-01-21@ 00:06:35

காஞ்சிபும்: கொரோனா பரவாமல் தடுக்க மற்றும் கட்டுபடுத்தும் வகையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது இடங்களிலும், விழா நிகழ்ச்சிகளிலும், வழிபாட்டு தலங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கடைபிடித்து அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி முறையாக செலுத்தி கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. கலெக்டர் ஆர்த்தி, முகாமை தொடங்கி வைத்தார். இதேபோல், போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமை எஸ்பி சுதாகர் தொடங்கி வைத்தார். இதில் 100 காவலர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்களுக்கு, தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றி போலீசாருக்கு எடுத்துக்கூறி, முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகாமில் டிஎஸ்பி (பயிற்சி) ஐமன்ஜமால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:
Kanchipuram District Police Booster Vaccine SP காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி எஸ்பிமேலும் செய்திகள்
சங்க பொது செயலாளர் கைது மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல்: திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு
நாய்களிடமிருந்து மயிலை காப்பாற்றிய வாலிபர்: பொதுமக்கள் பாராட்டு
ஒதப்பை கிராமத்தில் ரூ.22.50 கோடியில் விறுவிறுப்பாக நடைபெறும் உயர்மட்ட பால பணிகள்: விரைவில் திறக்க ஏற்பாடு
ஆவடி சாலையில் மின்விளக்குகள் சீரமைப்பு
சீத்தஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் 4 வருடங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை
வாகனம் மோதி மூதாட்டி பலி
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!