அடகு கடைக்காரருக்கு வெட்டு: வாலிபருக்கு வலை
2022-01-21@ 00:06:31

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே மாமண்டூர் ஊராட்சியில் ஜுவல்லரி மற்றும் அடகு கடை நடத்தி வருபவர் தர்மா. நேற்று மாலை மாமண்டூர் அடுத்த வடபாதி கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (32) என்பவர், நகை அடகு வைக்க, தர்மா கடைக்கு சென்றார். நகை அடகு வாங்குவதில் சந்தேகம் ஏற்பட்டதால், தர்மா நகையை அடகு வாங்க முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தர்மாவின் தலையில் 4 இடங்களில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார். படுகாயமடைந்த அவர், அலறி துடித்தபடி வெளியே ஓடி வந்தார். இதை பார்த்ததும், அக்கம் பக்கத்தினர், தர்மாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சிலம்பரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஆந்திராவுக்கு மினிவேனில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது
தஞ்சை அருகே பழங்கால உலோக சிலைகள் பறிமுதல்: 2 பேர் கைது..!!
மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவன்...தட்டிக்கேட்ட மகனை பீர்பாட்டிலால் குத்தியதால் மனைவி ஆத்திரம்!!
அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஏட்டுவை தாக்கிய போதை ஆசாமிகள்; 3 பேர் கைது
மேலூர் அருகே பயங்கரம், காதலித்து திருமணம் செய்த இளம்பெண் எரித்து கொலை: 3-வது திருமணம் செய்த கணவர், பெற்றோருடன் கைது
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!