முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை ; தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை : கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் வாபஸ் பெற்றது இங்கிலாந்து அரசு!
2022-01-20@ 08:27:26

லண்டன் : பிரிட்டனில் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி இருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1.08 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.55 கோடியை தாண்டிவிட்டது. 24 மணி நேரத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 359 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்த நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நடப்பில் உள்ள பெருந்தொற்று கட்டுபாடுகளை அகற்ற உள்ளதாக கூறினார். பிரிட்டனில் வரும் 27ம் தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் பொது இடங்களில் நடமாட தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று அறிவித்து அவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வகுப்பறைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடும் உடனடியாக திரும்ப பெறப்பட்டது.
அத்துடன் அரசு இனிமேல் வீட்டில் இருந்து வேலை செய்யும்படி மக்களைக் கேட்காது என்றும் மக்கள் இப்பொது அலுவலகத்திற்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து தங்கள் முதலாளியிடம் பேச வேண்டும் என்றும் போரின் கூறினார். கூடுதல் தவணை தடுப்பூசி திட்டம் முழுவதும் பிரிட்டன் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து கட்டுப்பாடுகள் விளக்கி கொள்ளப்படுவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். போர்க்கால அடிப்படையில் பிரிட்டன் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு வந்தாலும் தினசரி தொற்று குறையாத நிலையில், கட்டுப்பாடுகளை ஜான்சன் அரசு நீக்கியிருப்பது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
Tags:
பிரதமர் போரிஸ் ஜான்சன்மேலும் செய்திகள்
அமெரிக்காவில் கடும் குழப்பம் கருக்கலைப்புக்கு அனுமதி தந்த உயர் நீதிமன்றங்களால் பரபரப்பு: உடனடி தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
மேற்கு நாடுகளின் மீதான கோபத்தை உக்ரைன் மக்கள் மீது காட்டும் ரஷ்யா: குடியிருப்புகளை தாக்குவதன் பின்னணி
ஈரானில் நிலநடுக்கம் 5 பேர் பலி
மெல்ல மெல்ல குறையும் கொரோனா; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 55.35 கோடியை தாண்டியது.! 63.59 லட்சம் பேர் உயிரிழப்பு
ஈரானின் பந்தர்அப்பாஸ் நகரின் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவு.! 3 பேர் உயிரிழப்பு
தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிள் லண்டலின் கண்டுபிடிப்பு..!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்