நிதியுதவி வழங்கினார் என்பதற்காக நிர்வாகியாக நியமிப்பதா?.. விளையாட்டு சங்கங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
2022-01-19@ 18:58:38

சென்னை: நிதியுதவி வழங்கினார் என்பதற்காக நிர்வாகியாக நியமிப்பதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வட்டு எறிதல் வீராங்கனை நித்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில்; தேசிய அளவிலான தடகள போட்டியில் மாநில தடகள விளையாட்டு சங்கம் தன்னை அனுமதிக்கவில்லை என குருப்பிட்டிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வீராங்கனை நித்யா தொடர்ந்த வழக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்த்துள்ளார். தகுதியற்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட விளையாட்டு சங்கத்தை 2 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு விளையாட்டு சங்கமும் அரசிடம் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். உறுப்பினர்கள், வீரர்கள், சங்கங்களின் நிதிநிலை விவரங்களை அரசிடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும். தகுதியான வீரர்களை தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பாதது குறித்து புகாரளிக்க தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். விளையாட்டு போட்டிகளுக்கு செலவிடப்படும் தொகை ஆன்லைனில் வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
அண்ணாநகர் மண்டலத்தில் 400 பேருக்கு கொரோனா: தடுப்பு பணிகள் தீவிரம்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சொத்து வரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: மாநகராட்சி தகவல்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 26 செயற்கை நீரூற்றுகள்: வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ரம்யமான காட்சி; சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர்
தொழிலதிபர் மீது வழக்கு ஸ்ரீபெரும்புதூர் போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக ஆபரேஷன் செய்தவர்களில் 99 சதவீதம் பேர் நலமாக உள்ளனர்: அதிகாரி தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்