காய்கறி சந்தை வியாபாரிகளிடம் ரூ.2 கோடி பணம் வசூலித்து மோசடி: தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் கைது
2022-01-19@ 17:08:31

ஈரோடு: ஈரோட்டில் காய்கறி வியாபாரிகளிடம் இரண்டு கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளாக உள்ள அதிமுக பிரமுகர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 2015ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய் பணம் வசூலித்துள்ளனர். அந்த பணத்தில் வாங்கிய 20 ஏக்கர் நிலத்தை 5 நிர்வாகிகள் தங்கள் பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் பதிவு செய்தனர். வாங்கிய நிலத்தை பிரித்து தராமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் உறுப்பினர்களுக்கு தெரியாமல் 20 ஏக்கரையும் 12 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவரான அதிமுக மாவட்ட பிரிதிநிதி பழனிச்சாமி, அவரது மனைவி மேகலா, மகன் வினோத்குமார், வியாபாரிகள் சங்க செயலாளரான அதிமுக கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் முருகேசன், அவரது மனைவி சாந்தி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் பொருளாளர் வைரவேல், சங்கத்தலைவரின் மகன் வினோத்குமார், துணைச்செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்தவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் சங்க செயலாளரும் அதிமுக கருங்கல்பாளைய பகுதி செயலாளருமான முருகேசனை திண்டிவனத்தில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள 7 பேரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Tags:
கைதுமேலும் செய்திகள்
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் இலையை விழுங்குமா தாமரை?...எடப்பாடி, பன்னீர்செல்வம் நடத்தும் பங்காளி சண்டையில் கலகலத்து போன அதிமுக கூடாரம்
சொல்லிட்டாங்க...
பள்ளிகளில் தமிழ் பாட வேளைகளை குறைக்கக்கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
விமர்சனங்களை புறந்தள்ளி மக்கள் பணியை தொடர வேண்டும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இரட்டை இலைச் சின்னத்தை முடக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு: நாளை விசாரணை..!
உருண்டு புரண்டு அண்ணாமலை வந்தாலும் பாஜ மீதான மக்கள் கோபம் கடுகளவும் குறையாது: கே.எஸ்.அழகிரி ஆவேசம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!