ஊத்தங்கரை அருகே எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
2022-01-19@ 12:50:57

சூளகிரி : சூளகிரி அருகே திருமலை கவணிகோட்டாவில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதனை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழாக்கள் நடந்து வருகிறது. நேற்று சூளகிரி அருகேயுள்ள திருமலை கவணிகோட்டாவில், எருதுவிடும் விழா நடைபெற்றது. காலை 9.45 மணியளவில் எருது விடும் விழா தொடங்கியது.
இதில் பாத்தகோட்டா, காமன்தொட்டி, பீர்ஜேப்பள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி, சானமாவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து வந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். விழாவில் 300 எருதுகள் அவிழ்த்து விடப்பட்டது. விழாவை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். இதையொட்டி உத்தனப்பள்ளி, சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடி கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு எருதுகட்டு விழா நடைபெற்றது. விழாவில் எருதுகளை உறிபொம்மையை காட்டி உசுப்பேற்றி இளைஞர்கள் விரட்டி சென்றனர். சேலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான காளைகள் கொண்டு வரப்பட்டது. இதில் பெரியதள்ளபாடி சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி, சின்னகண்ணு ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்