பொங்கலுக்காக வந்த செங்கரும்புகள் தேக்கம்-வேலூர் மொத்த வியாபாரிகள் பாதிப்பு
2022-01-19@ 12:15:35

வேலூர் : வேலூர் மார்க்கெட்டில் பொங்கலுக்காக கொள்முதல் செய்யப்பட்ட செங்கரும்புகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு கதிரவனுக்கு படைக்கப்படும் செங்கரும்பு வேலூர் மாவட்டத்துக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்பட தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் திருநாளுக்காக வேலூர் மார்க்கெட்டுக்கு ஒரு லாரியில் 300 கட்டுகள் என, 10 சரக்கு லாரிகளில் 3 ஆயிரம் செங்கரும்பு கட்டுகள் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டன.
அதேநேரத்தில் சிதம்பரம், சேலம், விழுப்புரம், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து விவசாயிகளே செங்கரும்புகளை லாரிகளில் கொண்டு வந்து நேரடியாக வேலூரில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்தனர். இதன் காரணமாக வேலூர் மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்த செங்கரும்புகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.எனவே, தேக்கமடைந்த செங்கரும்புகளை தமிழக அரசு வாங்கி தற்போது ரேஷன் கடைகளில் விடுபட்டவர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
சேலம் ஜங்ஷன் அருகே குறுகலான ரயில்வே தரைப்பாலம் 10 மணி நேரத்தில் மாற்றியமைப்பு: இன்னும் பாதியளவு பாலத்தை சீரமைக்க ஏற்பாடு
தர்மபுரியில் அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து: 24 பேர் படுகாயம்
வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக வீடு இடிந்து சேதம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!