ஷாருக்கான், சல்மான்கான் படப்பிடிப்பு நிறுத்தம்
2022-01-19@ 00:23:07

மும்பை: ஷாருக்கான், சல்மான்கான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மகாராஷ்டிராவிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஷாருக்கான் நடிக்கும் பதான், சல்மான்கான் நடிக்கும் டைகர் 3 ஆகிய படங்களை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது, ஓரிருவருக்கு கொரோனா தொற்று இருந்தது. தற்போது கொரோனாவுடன் ஒமிக்ரான் பரவி வருவதால், இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்க யஷ்ராஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று படப்பிடிப்பில் பலருக்கும் பரவினால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக பட வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
கடந்த 5 ஆண்டுகளில் எம்பிக்களின் ரயில் பயண செலவு ரூ.62 கோடி: ஒன்றிய அரசு தகவல்
ஏக்நாத் முதல்வரான நிலையில் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; அமலாக்கத்துறை முன் சிவசேனா எம்பி ஆஜர்
ஐதராபாத்தில் நாளை, நாளை மறுநாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ‘பை பை மோடி’ பேனர் வைத்ததால் பரபரப்பு
மதம் தொடர்பான கருத்து தெரிவித்த ஆபாச நடிகைக்கு கொலை மிரட்டல்
மணிப்பூர் நிலச்சரிவு சம்பவம், 7 வீரர்கள் உட்பட 14 பேரின் சடலம் மீட்பு; மேலும் 60 பேரின் கதி என்ன?
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்