மகாராஷ்டிரா மும்பையில் கடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் உயிரிழப்பு
2022-01-18@ 21:53:08

மும்பை: மகாராஷ்டிரா மும்பையில் கடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். மும்பை கப்பல் துறைமுகத்தில் இருந்த ஐ.என்.எஸ். ரன்வீர் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு கடற்படையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கப்பலின் உள் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டது. ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கப்பல் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 3 பேர் வீரர்கள் உயிரிழந்ததாகவும் 11 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் வெடிவிபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் இந்திய கடற்படையில் முக்கிய கப்பல்களில் ஒன்றாகும். ரன்வீர் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் 1986-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
அசாமில் தொடரும் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு.! தொடரும் மீட்பு பணி
மொபைல் இணைய சேவை மிகவும் மலிவான கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது; பிரதமர் மோடி பேச்சு
முதுகுதண்டில் அறுவை சிகிச்சை; அமரீந்தர் சிங்கிடம் நலம் விசாரித்த பிரதமர்
வேலியே பயிரை மேய்ந்த அவலம்.. பெண் காவலரை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய போலீஸ்காரர்
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதால்வத் திடீர் கைது: போலி ஆவணங்களை தயாரித்து வழக்கு தொடர்ந்ததாக குற்றச்சாட்டு
நடுரோட்டில் இளம்பெண்ணை கொன்று சடலத்தை ஏரியில் வீசிய கணவன் கைது: திருமணமான 2 ஆண்டில் பரிதாபம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!