போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம்: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு
2022-01-18@ 17:43:47

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் இந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும். இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து அனைவர்க்கும் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒன்றிய அரசு கொடுத்துள்ள விதிமுறைகளின் படி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று தற்போது தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோவிட் பாதுகாப்பு காரணங்களுக்காக போலியோ சொட்டு மருந்து போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்போது கோவிட் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினசரி 23,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் உறுதியாகி வருகிறது. ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது, போலியோ சொட்டுமருந்து பணிகளுக்கு செல்வது சுகாதார பணியாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். குழந்தைகளை போலியோ சொட்டுமருந்து போடும் இடத்திற்கு அழைத்து வருவதும், ஏற்கனவேற் கோவிட் பரவல் அதிகமாகி கொண்டு வருவதால் குழந்தைகளுக்கும் பரவுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதனை தவிர்க்க போலியோ சொட்டு மருந்து போடும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை கொடுத்துள்ள வழிகாட்டுதலின் படி தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளனர். பிப்ரவரி கடைசி வாரத்தில் கொரோனா பரவல் குறைந்துவிடும் என்று பொது சுகாதாரத்துறை வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tags:
போலியோ சொட்டு மருந்துமேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்