விவசாயிகளை சமாதானப்படுத்த பட்ஜெட்டில் உர மானியத்துக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு?
2022-01-18@ 01:43:30

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை சமாதானப்படுத்துவதற்காக பட்ஜெட்டில் ஒன்றிய அரசு மானியம் ஒதுக்கீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த மாதம் ஒன்றிய அரசு 2022-2023ம் நிதியாண்டுக்காக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளை சமாதானப்படுத்துவதற்காக அரசு மானியம் ஒதுக்கீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உர நிறுவனங்கள் சந்தை விலையைக்காட்டிலும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு உரத்தை விற்பனை செய்ததற்காக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.1.4லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இது ரூ.1.3 லட்சம் கோடியாக இருந்த நிலையில் மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்து ஆலோசனை நடந்து கொண்டு இருப்பதாகவும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
Tags:
Farmer to be persuaded in the budget fertilizer subsidy Rs 1.4 lakh crore allocation? விவசாயி சமாதானப்படுத்த பட்ஜெட்டில் உர மானிய ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு?மேலும் செய்திகள்
நடுவானில் எரிபொருள் தீர்ந்ததால் இந்திய தனியார் விமானம் பாக்.கில் அவசர தரையிறக்கம்: கடந்த 15 நாட்களில் 6வது சம்பவம்
குரங்கு பொம்மை முகமூடி அணிந்து துணிகரம் கிராம வங்கியில் ரூ.4.15 கோடி தங்க நகைகள் கொள்ளை: வெல்டிங் தீயில் ரூ.7.30 லட்சம் கருகியது
வரலாற்றில் முதன்முறையாக திருப்பதியில் ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை: 77,907 பக்தர்கள் தரிசனம்
பணப் பரிமாற்ற மோசடி வழக்கு சமாஜ்வாடி எம்எல்ஏவின் மனைவி, மகனுக்கு சம்மன்: அமலாக்கத்துறை அதிரடி
ராகுல் வீடியோ குறித்து தவறான கருத்து உபி.யில் தனியார் டிவி தொகுப்பாளர் கைது
அரசியலமைப்பு சட்டம் பற்றி சர்ச்சை பேச்சு சட்டப் பேரவையில் அமைச்சர் மன்னிப்பு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!