தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்ட நாட்களில் பக்தர்களுக்கு உணவை பொட்டலங்களாக வழங்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு
2022-01-18@ 01:09:14

சென்னை: கோயில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்ட நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானத்தை உணவு பொட்டலங்களில் வழங்க அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் உள்பட பல கோயில்களில் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படும் நாட்களில் அன்னதானத்தை உணவு பொட்டலங்களில் விநியோகிக்க அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படும் நாட்களில் அன்னதானத்தை உணவு பொட்டலங்களில் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்டவற்றை உணவு பொட்டலங்களாக பார்சல் செய்து வழங்கி வருகிறோம். இவ்வாறு கூறினார்.
Tags:
Darshan ban devotee food parcels Commissioner of Charities தரிசன தடை பக்தர் உணவை பொட்டலங்களாக அறநிலையத்துறை ஆணையர்மேலும் செய்திகள்
மின்வாரியத்தில் 2020-21ம் ஆண்டிற்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து: அரசு உத்தரவு
ஹார்லிக்ஸ் டயாபட்டீஸ் பிளஸ், அப்போலோ சுகர் கிளினிக்ஸ் இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்பு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது
படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு மாணவர்கள் வளரவேண்டும்: அமைச்சர் பொன்முடி அறிவுரை
ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் சுசி கணேசன் மீது அவதூறு கருத்து வெளியிடுவதா? கவிஞர் லீனா மணிமேகலைக்கு ஐகோர்ட் கண்டிப்பு
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தியின் தோற்றம் வெளியீடு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!