தமிழகத்திற்கு தேவையான பேரிடர் நிதியை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தர அமித்ஷா உறுதி: டெல்லியில் தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு பேட்டி
2022-01-17@ 21:04:14

டெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழ்நாடு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தியது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நீட் விலக்கு சம்பந்தமாக தமிழக எம்பிக்கள், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச அனுமதி கேட்டபோது பலமுறை மறுத்துவிட்டார். இது தமிழகத்துக்கு ஏற்பட்ட அவமானம் என்று அனைத்துக்கட்சியினரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி தலைமையில் அனைத்துக்கட்சி எம்பிக்கள் இன்று காலை தனித்தனி விமானங்கள் மூலம் டில்லி புறப்பட்டு சென்றனர். இதன்படி எம்பிக்கள் டி.ஆர்.பாலு (திமுக), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), ரவிக்குமார் (விசிகே), ஜி.கே மணி எம்எல்ஏ (பாமக) மற்றும் நவாஸ் கனி எம்.பி. (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோர் விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றனர். இவர்கள் மாலை 4.30 மணிக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.
ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் தமிழ்நாடு அணைத்துக் கட்சி குழு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியது. அப்போது; நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமித்ஷாவிடம் அளித்தோம். ஒன்றிய சுகாதாரம், கல்வித்துறை அமைச்சருடன் கலந்து பேசி முடிவை தெரிவிப்பதாக அமித்ஷா கூறினார். தமிழகம் கோரிய நிதியை ஜன.31-க்குள் அனுப்பி வைப்பதாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்வதற்கான நிதியை ஜன.31க்குள் தருவதாக உறுதி அளித்தார்.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும் அமித்ஷாவிடம் கூறினோம். ஏற்கனவே அமித்ஷா தங்களை சந்திக்க முடியாததற்கு வேலைப்பளுவி காரணம் என அவர் குறிப்பிட்டார் இவ்வாறு கூறினர்.
மேலும் செய்திகள்
விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது: யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு
தொழில்நுட்ப பயன்பாட்டில் குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: அமித் ஷா
ஜூலை 11 மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
மகாராஷ்டிராவில் முற்றும் மோதல்; ‘மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்’.! ஒன்றிய உள்துறை செயலாளருக்கு கவர்னர் கோஷ்யாரி கடிதம்
இடைத்தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர்; ஜே.பி.நட்டா மகிழ்ச்சி
தங்கக் கடத்தலில் பினராயி விஜயனுக்கு தொடர்பு என முழக்கம்: கூச்சல் குழப்பத்தால் கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!