மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதி மேலாளர் உட்பட 12 பேருக்கு கொரோனா : மாஸ்க் அணியவில்லை என குற்றச்சாட்டு
2022-01-17@ 01:13:09

சென்னை : நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதே போல், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காட்டுத் தீப்போல் பரவி வருகிறது. தொற்றை, தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிகை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையம், கால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், அதிகரிக்கும் கொரோனா தொற்றை தடுக்க, பஸ்களில் 75 சதவீத பயணம், தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு, அதேப்போல் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக விடுதி மேலாளர் கார்த்திகேயனுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் மருத்துவ குழுவினருடன் சென்று 78 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
அதில், 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், பேரூராட்சி ஊழியர்கள் வளாகம் முழுவதும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்தனர். அரசு ஊழியர்கள் மாஸ்க் அணியாமல் பணியில் ஈடுபட்டதே கொரோனா பரவலுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் செய்திகள்
அண்ணாநகர் மண்டலத்தில் 400 பேருக்கு கொரோனா: தடுப்பு பணிகள் தீவிரம்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சொத்து வரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: மாநகராட்சி தகவல்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 26 செயற்கை நீரூற்றுகள்: வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ரம்யமான காட்சி; சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர்
தொழிலதிபர் மீது வழக்கு ஸ்ரீபெரும்புதூர் போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக ஆபரேஷன் செய்தவர்களில் 99 சதவீதம் பேர் நலமாக உள்ளனர்: அதிகாரி தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்