என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் : உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2022-01-16@ 01:14:38

சென்னை : என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றும், தை பிறந்ததால் மட்டுமல்ல ஏற்கனவே எனக்கு நல்ல வழிதான் உள்ளது என்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து நிருபர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பொங்கல், புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தை பிறந்துள்ளது அரசியல் பணி, திரையுலகில் இலக்கு எதுவும் உள்ளதா என்ற கேடக்கிறீர்கள். இலக்கு என்று எதுவுமில்லை. எனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன், தலைவர் சொல்வதை செய்து கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உங்களுக்கு வழி பிறக்குமா? என்று நிருபர்கள் கேட்டபோது, ‘எனக்கு ஏற்கனவே நல்ல வழிதானே இருக்கின்றது’ என்று உதயநிதி பதில் அளித்தார்.
மேலும் செய்திகள்
அண்ணாநகர் மண்டலத்தில் 400 பேருக்கு கொரோனா: தடுப்பு பணிகள் தீவிரம்
கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சொத்து வரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: மாநகராட்சி தகவல்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 26 செயற்கை நீரூற்றுகள்: வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ரம்யமான காட்சி; சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர்
தொழிலதிபர் மீது வழக்கு ஸ்ரீபெரும்புதூர் போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீரக ஆபரேஷன் செய்தவர்களில் 99 சதவீதம் பேர் நலமாக உள்ளனர்: அதிகாரி தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்