எம்ஜிஆர் ஆட்சியை அமைக்க இயக்கத்தை ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயம் : சசிகலா அறிக்கை
2022-01-16@ 01:13:09

சென்னை : எம்ஜிஆர் ஆட்சியை அமைக்க இயக்கத்தை ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயம் என்று சசிகலா கூறியுள்ளார். இதுகுறித்து, சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சி தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவர் எம்ஜிஆர். நமது இயக்கம் விருட்சமாக பரந்து இருப்பதற்கு முழு முதற் காரணமாக இருப்பது வேர்களாகிய தொண்டர்கள் தான்.
அதனால் தான் சட்ட விதிகளில் கூட தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தார் எம்ஜிஆர். அதுபோன்று அடிமட்ட தொண்டர்கள் விரும்பும் தலைமையால் தான் நம் கட்சியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கருதியே பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார்.
எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஆதம்பாக்கத்தில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக மூத்த முன்னோடிகள் 1600 பேருக்கு பொற்கிழி: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்
மதச்சண்டையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் பாஜ: டி.ராஜா குற்றச்சாட்டு
தனக்கே தெரியாத சமூகநீதி பற்றி திமுகவிற்கு பாடம் எடுப்பதா? முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு எம்.பி கண்டனம்
சொல்லிட்டாங்க...
ராகுல் காந்தியை தொடர்புபடுத்தி பாஜ போலி வீடியோ: காங்கிரஸ் எச்சரிக்கை
நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்: திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்த பின் ஓபிஎஸ் பேட்டி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்