அந்தேரியில் சம்பவம் ஆட்டோவில் சென்றவர் கார் மோதி பரிதாப பலி
2022-01-15@ 14:19:13

அந்தேரி: சம்பவத்தன்று ஜெயிஸ் என்ற நபர் இந்திரஜத் என்ற நபரில் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்தேரி எஸ்.வி.சாலை, ஜெயின் கோயில் அருகே உள்ள சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, அதே வழியாக வந்த கார் ஒன்று இந்திரஜித் ஆட்டோ மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோவில் இருந்த ஓட்டுனர் உட்பட இரண்டு பேரும் சாலையில் விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இரண்டு பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலே ஜெயிஸ் உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிவைர் ராஜு கோவில்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
மேலும் செய்திகள்
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!