பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளர் யார்? டெலி வாக்குப்பதிவு நடத்தும் கெஜ்ரிவால்
2022-01-14@ 11:04:59

புதுடெல்லி: பஞ்சாப்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்று தீர்வு காணும் வகையில் டெலி வாக்குப்பதிவை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது. பஞ்சாப் ஆம்ஆத்மி கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண 7074870748 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால் இந்த போன் லைன் ஸ்தம்பித்துள்ளது. இது குறித்து கெஜ்ரிவால் கூறியதாவது: ‘மக்கள் டெலி வாக்கெடுப்பின் அடிப்படையில் ஜன.17ம் தேதி ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பேன். ஒரு கட்சி பொதுமக்களே தங்கள் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க அனுமதிப்பது இதுவே முதல் முறையாகும்.’ என்றார்.
மேலும் செய்திகள்
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!