உ.பி தேர்தலில் போட்டியிடும் 125 காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: உன்னாவ் பலாத்கார சிறுமியின் தாய்க்கு டிக்கெட்
2022-01-14@ 11:03:35

புதுடெல்லி: உ.பி. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 125 வேட்பாளர்களின் பட்டியலை முதல் கட்டமாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதில் உன்னாவில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தாய்க்கு தேர்தல் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. உ.பியில் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி மார்ச் 7 வரை 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டிவருகின்றன. இதற்கிடையில் காங்கிரஸ் முதற்கட்டமாக 125 வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. இதில் 50 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் உன்னாவில் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியின் தாய்க்கும் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் டிக்கெட் வழங்கியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: ‘40 சதவீதம் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெண்கள். 40 சதவீத வேட்பாளர்கள் இளைஞர்கள். இவர்களை ஆட்சி அதிகாரத்தின் ஒரு பகுதியாக கொண்டுவர காங்கிரஸ் விரும்புகிறது.’ என்றார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டரில்,‘உன்னாவில் ஒரு தாயின் மகளுக்கு பாஜ அநீதி இழைத்தது. தற்போது அந்த தாய் நீதியின் முகமாக ஆகிவிட்டார். போராடுவோம், வெல்வோம்.’ என குறிப்பிட்டுள்ளார். இதே போன்று பகுஜன் சமாஜ் கட்சியும் 300 வேட்பாளர்களை இறுதி செய்துள்ளது. இதில் 90 பேர் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் என்று அக்கட்சியின் பொது செயலாளர் எஸ்.சி.மிஸ்ரா கூறினார்.
மேலும் செய்திகள்
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!