உ.பி. தேர்தலில் சமாஜ்வாதியுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி: அக்கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவிப்பு
2022-01-12@ 11:37:25

லக்னோ: உத்திரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்திருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் மேலும் 13 பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாகவும் சரத்பவார் தெரிவித்திருக்கிறார். உத்திரப்பிரதேசத்தை தொடர்ந்து கோவாவில் வலுவான அணி அமைக்க முயற்சி செய்து வருவதாகவும் பவார் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் காங்கிரசும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ள நிலையில் உத்திரப்பிரதேசத்தில் எதிரெதிர் அணியில் இவை களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் உத்திரப்பிரதேசத்தில் அமைச்சர் சுவாமி பிரசாத் மௌரியா பதவி விலகியிருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து அக்கட்சியின் உயர்மட்ட குழு விவாதித்துள்ளது.
மேலும் செய்திகள்
2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை
வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
பாஜ, காங்கிரஸ் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
புதிதாக 1249 பேருக்கு கொரோனா
ஒன்றிய அரசுக்கு எதிரான 14 எதிர்க்கட்சிகள் மனு ஏப்.5ல் விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
அதானி விவகாரத்தில் விசாரணை கேட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி 40 எம்பிக்கள் அதிரடி கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி