திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு இரவு நேரங்களில் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் திண்டாட்டம்
2022-01-12@ 10:48:31

நெல்லை: இரவு நேர ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை செல்வோர் திண்டாட்டத்தில் உள்ளனர். பகல் ெபாழுதில் வெயில் கொடுமையை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் ேகாயிலுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருவர். பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். நெல்லை - திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, நாகர்கோவில் - திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட சாலைகள் பகல் பொழுதில் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.
மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலிருந்து வருவோர் அதிகாலையில் நெல்லையை அடைந்து கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி புறப்பட்டுச் செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பச்சை ஆடை உடுத்திய ஆண், பெண் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு காரணமாக பல்வேறு இடங்களில் பக்தர்கள் இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பக்தர்களை போலீசார் பாதயாத்திரை செல்ல விடுவதில்லை. ஆலங்குளம், நெல்லை மாநகர பகுதிகளில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, படுத்து தூங்கிச் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலை அடைய காலதாமதம் ஆவதாக தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பாபநாசம், விகேபுரம், பாவூர்சத்திரம், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் திருச்செந்தூர் சென்றடைய விரும்புவர். ஆனால் இரவு நேர ஊரடங்கால் அவர்கள் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முருக பக்தர்கள் கூறுகையில், ‘‘பகலில் வெயில் கொடுமை காரணமாக பக்தர்கள் எப்போதும் இரவு நேர பயணங்களையும், அதிகாலை பயணங்களையுமே அதிகம் விரும்புவர். நள்ளிரவு நேரங்களிலும், பிற்பகல் வேளைகளிலும் கிடைக்கிற இடத்தில் ஓய்வெடுத்து பாதயாத்திரை செல்வோம். இவ்வாண்டு இரவு நேர ஊரடங்கு காரணமாக பகல் பொழுது முழுவதும் பயணிக்க வேண்டியதுள்ளது.
பகல் நேர சூட்டில் பயணிப்பதால் காலில் கொப்புளம், வெடிப்பு உண்டாகிறது. மேலும் திருச்செந்தூர் சென்று சேர கூடுதல் கால அவகாசமும் தேவைப்படுகிறது. அலகு குத்தி வரும் பக்தர்களும், விரதமிருந்து வரும் பக்தர்களும் இரவு நேரங்களில் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்’’ என்றனர். இரவு நேர ஊரடங்கு காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலக சாலை, வண்ணார் பேட்டை, பாளை வி.எம் சத்திரம் சாலைகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் செய்திகள்
கலெக்டரிடம் விவசாயிகள் புகார் எதிரொலி; மேக்கரை எருமைசாடி நீரோடையில் தடுப்பணை கட்டி ஆக்கிரமிப்பு: பொதுப்பணித்துறை, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு
ராஜஸ்தானில் இருந்து கொண்டு வந்து நடுத்தெருவில் விட்டுச் சென்ற 18 ஒட்டகங்கள் ஓசூரில் மீட்பு: கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை
திருபுவனை, மதகடிப்பட்டு, கண்டமங்கலம், அரியூரில் மேம்பால பணிகள் தீவிரம்: 4 வழிச்சாலை பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்
குஜராத் போல் சலுகைகள் தூத்துக்குடி உப்பு உற்பத்தி தொழில் மேம்படுமா?: உற்பத்தியாளர்கள் கோரிக்கை
அனைத்து கிராமங்களுக்கும் கூடுதலாக விநியோகம் செய்ய ரூ.4600 கோடியில் 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்: வடிவமைப்பு பணிகள் தீவிரம்
சாலை விபத்துக்களில் ஒரு ஆண்டில் 435 பேர் பலி: வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்