ஞாயிறு முழு ஊரடங்கால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17ம் தேதிக்கு மாற்றம்
2022-01-12@ 01:12:11

மதுரை: ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ம் தேதிக்கு பதிலாக மறுநாள் 17ம் தேதி நடைபெறும் என மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறியுள்ளார். இது குறித்து மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் அளித்த பேட்டி: மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள், வரும் 14 முதல் 16ம் தேதி வரை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாக வரும் 16ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அன்றைய தினம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்துவதில் பல சிக்கல் ஏற்படும் என்பதால், ஊர் மக்கள், விழா குழுவினருடன் ஆலோசனை நடத்தினோம். இதன்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மறுநாள் 17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வழக்கமான மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சிறப்பாக நடத்த உள்ளோம். வீரர்கள், காளைகளை ஆன்லைனில் பதிவு செய்வது நேற்று மாலை 3 மணிக்கு துவங்கியது. இன்று மாலை 5 மணி வரை நடைபெறும். ஜல்லிக்கட்டில் பங்கேற்பது தொடர்பாக முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்யலாம். ஆன்லைன் பதிவு ஓரே நாளில் நடைபெறும். பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே பாஸ் வழங்கப்பட உள்ளது. பாஸ் இல்லாமல் யாரும் அனுமதி இல்லை. அந்தந்த பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் வரலாம். இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!