நடிகையின் 9 மாத குழந்தைக்கு கொரோனா
2022-01-11@ 17:01:18

மும்பை: பிரபல தொலைக்காட்சி நடிகர்களான மோஹித் மாலிக் மற்றும் அட்டிட் மாலிக் தம்பதியின் 9 மாத குழந்தையான எக்பீருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அட்டிட் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகனுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் எழுதியுள்ள குறிப்பில், ‘என்னுடைய வீட்டு உதவியாளர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர் அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக நாங்களும் வெவ்வேறு அறைகளில் தனிமைப்படுத்திக் கொண்டோம். எங்களுக்கு கொரோனா நெகடிவ் ரிசல்ட் வந்தது. ஆனால் எங்களது குழந்தை எக்பீருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. அவனுடைய வெப்பநிலையை சரிபார்த்த போது, அது 102 டிகிரியாக இருந்தது. பரிசோனையில் எக்பீருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதியாகி உள்ளது. தொடர் கண்காணிப்பில் எக்பீரை கவனித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பிரதமர் யார் நலனின் அக்கறை காட்டுகிறார்?.. ஜிஎஸ்டி வரி குறித்து ராகுல் காந்தி கண்டனம்..!
தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் உடன் தங்கியவருக்கு ஜாமின்: மும்பை ஐகோர்ட் உத்தரவு
பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு; காரில் ஆட்டம் போட்ட குற்றவாளிகள் கைது: டெல்லி போலீஸ் அதிரடி
பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஹேமந்த் சோரனின் ஆதரவு கிடைக்குமா?.. பழங்குடியினர் கட்சி என்பதால் எதிர்பார்ப்பு
பெண் தெய்வம் குறித்த சர்ச்சை: லீனா மீது உ.பி போலீஸ் வழக்கு
அரசியல் நமக்கு ஒத்துவராது: பாலிவுட் நடிகர் கருத்து
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!