தேசிய ஊரக பணியாளர்களை பள்ளிகளின் தூய்மை பணிக்கு பயன்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை
2022-01-11@ 01:11:17

திருவள்ளூர்: பள்ளிகளின் தூய்மை பணிக்காக மாணவர்கள் நலன்கருதி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை சுழற்சி முறையில் தினமும் பயன்படுத்தினால் பள்ளி வளாகம் மேம்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் தலைமையில் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது.
கொரோனா மற்றும் தொடர்மழை காரணமாக அனைத்துவகை அரசு பள்ளிகளில் தூய்மைப்படுத்த சிரமங்கள் உள்ளன. பல பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் இல்லை. அதனால், பள்ளிகளின் தூய்மை பணிக்காகவும், மாணவர்கள் நலன்கருதி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை சுழற்சி முறையில் தினமும் பயன்படுத்தினால் பள்ளி வளாகம் மேம்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து உதவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அவருடன் சங்க நிர்வாகிகள் வே.ரேவதி, எஸ்.கந்தசாமி, எம்.ஜான்சன், வி.எம்.சுகுணா உள்பட பலர் இருந்தனர்.
மேலும் செய்திகள்
திருக்கழுக்குன்றத்தில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மறைவு
மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது
செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சோமங்கலம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாப பலி
கேளம்பாக்கம் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் தீ விபத்து ரூ. 20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!