பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி வடசென்னை ரேஷன் கடைகளில் முதல்வர் திடீர் ஆய்வு: நெறிமுறைகளை பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுரை
2022-01-11@ 00:06:51

சென்னை: ரேஷன் கடைகளில் சிறப்பு பொங்கல் தொகுப்பு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் ஆய்வு செய்தார். அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை பெற முதல்வர் அறிவுரை வழங்கினார். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையொட்டி, இந்த பணிகள் முறையாக நடைபெற்று வருவதையும், தரமான பொருட்கள் எவ்வித புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்திடவும், நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடந்த சனிக்கிழமை சென்னை, தீவுத்தீடல் அருகேயுள்ள அன்னை சத்யாநகர் பகுதியில் உள்ள நியாய விலை கடைக்கு நேரில் திடீரென ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, ராயபுரம், தொப்பை தெரு மற்றும் புது வண்ணாரப்பேட்டை, டாக்டர் விஜயராகவலு தெரு ஆகிய இடங்களில் உள்ள நியாய விலை கடைகளுக்கு நேரில் சென்று, சிறப்பு பொங்கல் தொகுப்பு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், அங்குள்ள பொதுமக்களிடம், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை பெற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அரசு வழங்கும் துணிப்பையில் 19 பொருட்கள் சரியாக வைக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:
Pongal package work North Chennai ration shop Chief Minister's surprise inspection பொங்கல் தொகுப்பு பணி வடசென்னை ரேஷன் கடை முதல்வர் திடீர் ஆய்வுமேலும் செய்திகள்
வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் விழிப்புணர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 13 பின்பிரிவு உதவி பொறியாளர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு
சென்னையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொடரும் பேச்சுவார்த்தை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ120.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
204-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை
பணியிடத்தில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!