திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை காண ஒரே இரவில் 50,000 இலவச தரிசன டிக்கெட் விநியோகம்.. அலைமோதிய கூட்டம்..!!
2022-01-10@ 14:41:03

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி காண இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 13ம் தேதி முதல் 10 நாட்களுக்கு பக்தர்கள் சொர்க வாசல் வழியாக அனுமதிக்கப்படவுள்ளனர். இதில் தினந்தோறும் 5,000 உள்ளூர் மக்கள் இலவசமாக செல்வதற்கு டிக்கெட் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடியதால் கோவிலில் நோய் தொற்று பரவும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
நாள் ஒன்றுக்கு 5,000 பேர் என 10 நாட்களுக்கு 50,000 டிக்கெட்டுகள் ஒரே இரவில் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திருப்பதியில் நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இலவச தரிசன டிக்கெட் வாங்க பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடியது நோய் பரவலை அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 14ம் தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கிறது. இந்த விழா வருகிற 22ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பூஜைகள், அலங்காரம், ஆராதனை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை, பிஎப் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பு: அமலுக்கு வருகிறது புதிய தொழிலாளர் விதிகள்
இந்தியாவில் ஒரே நாளில் 17,070 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி... 23 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை
‘ஆதார்-பான்’ எண் இணைக்காவிட்டால் இன்று முதல் இரு மடங்கு அபராதமாக ரூ.1000 கட்ட வேண்டும்!!
ஒருபக்கம் போராட்டம்.. மறுபக்கம் குவியும் விண்ணப்பம்! .. அக்னிபாதை விமானப்படையில் சேர ஒரே வாரத்தில் 2.72 லட்சம் பேர் விருப்பம்!!
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தேர்தல் நிதி பத்திரங்கள் இன்று முதல் விற்பனை; ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்