ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மூலவரை தரிசிக்க தடை
2022-01-10@ 01:21:18

ஸ்ரீகாளஹஸ்தி: கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மூலவரை தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்திராஜூ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், சானிடைசர் பயன்படுத்தியும் தரிசனம் செய்ய வேண்டும். தற்போது கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரானும் அதிகரித்து வருவதால் மாநில அறநிலையத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்- ஞானபிரசுனாம்பிகை தாயாரின் மூலவர் சன்னதியில் பக்தர்கள் தரிசிக்க இன்று(நேற்று) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.
மேலும் செய்திகள்
நுபுர் சர்மாவை கொன்றால் வீடு பரிசு அஜ்மீர் தர்கா மதகுரு கைது
‘காளி’ போஸ்டர் குறித்து சர்ச்சை கருத்து பெண் எம்பி மொய்த்ரா மீது மபி. போலீஸ் வழக்குப் பதிவு: எதிர்ப்பு வலுத்ததால் திரிணாமுல் விளக்கம்
பஞ்சாப் முதல்வருக்கு இன்று 2வது திருமணம்
தடகள வீராங்கனை பிடி.உஷா உள்பட 4 பேர் தேர்வு இளையராஜாவுக்கு எம்.பி. பதவி: பிரதமர் மோடி வாழ்த்து
டிவி தொகுப்பாளர் கைது விவகாரம் உத்தர பிரதேசம், சட்டீஸ்கர் போலீசார் ஆடு புலி ஆட்டம்: ராகுல் விவகாரத்தால் பரபரப்பு
இறக்குமதி செய்த நிலை மாறியது பொம்மைகள் ஏற்றுமதி 61 சதவீதம் அதிகரிப்பு: மோடியின் திட்டத்தால் பலன்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!