தன்னிச்சையாக சம்பள உயர்வு அறிவிப்பதா? பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் புகார்
2022-01-10@ 00:27:54

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற பெப்சியுடன், சம்பள உயர்வு குறித்து தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இன்னும் சில சங்கங்களிடம் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. இருதரப்பினரும் இன்னும் கையெழுத்திட்டு இறுதி செய்யவில்லை. அதற்குள், அதிக சதவிகிதம் சம்பள உயர்வு என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தன்னிச்சையாக அறிவித்துள்ளதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பள உயர்வு குறித்து பேசி இறுதி செய்தவுடன் தயாரிப்பாளர் சங்கமும், பெப்சியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தெரியப்படுத்துவோம். அதற்கு பிறகே சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும். அதுவரை, இன்று நடைமுறையில் உள்ள சம்பளத்தையே தயாரிப்பாளர்கள் வழங்க வேண்டும். கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றில் சிக்காமல் இருப்பதற்கான முகக்கவசத்தை படக்குழுவினருக்கு வழங்கி, தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, படப்பிடிப்புகள் மற்றும் பாடல், வசன ஒலிப்பதிவு உள்பட அனைத்து திரைத்துறைப் பணிகளையும் எச்சரிக்கையுடன் தயாரிப்பாளர்கள் கையாள வேண்டும்.
Tags:
Spontaneously pay rise announce? Pepsi Producers Association Complaint தன்னிச்சையாக சம்பள உயர்வு அறிவிப்பதா? பெப்சி தயாரிப்பாளர் சங்கம் புகார்மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு: அதிகாரிகள் தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மின்வாரிய குறைதீர் கூட்டம்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி
சியுஇடி நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
பத்திரப்பதிவுத்துறையில் 12 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!