தேனியில் 182 ஏக்கர் அரசு நிலம் மோசடி பட்டா மாறுதல் நிலங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு
2022-01-09@ 00:38:34

தேனி: தேனி மாவட்டத்தில் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான சுமார் 182 ஏக்கர் நிலத்தை கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது, பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த அன்னபிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் பலருக்கு அப்போதைய அரசு அதிகாரிகள் முறைகேடாக பட்டா மாறுதல் செய்தனர். இதில் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், சர்வேயர்கள், விஏஓ, அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் உள்ளிட்ட பலர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோசடி தொடர்பான ஆவணங்களை சேகரித்துள்ள சிபிசிஐடி போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமின்றி சந்தேகத்திற்குரியவர்களின் பட்டியல் குறித்து சேகரித்துள்ளனர். பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகம், பெரியகுளம் தாலுகா அலுவலகம், தாலுகா சர்வேயர் அலுவலகங்கள் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாறுதல் செய்துள்ள நிலத்தையும் நேற்று நேரில் ஆய்வு செய்துள்ளனர். ஓரிரு நாளில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து நேரில் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:
Theni 182 acres Government land fraud change of lease CBCID police investigation தேனி 182 ஏக்கர் அரசு நிலம் மோசடி பட்டா மாறுதல் சிபிசிஐடி போலீசார் ஆய்வுமேலும் செய்திகள்
காரியாபட்டி அருகே 1,100 ஆண்டு பழமையான சமண பள்ளி கண்டுபிடிப்பு
தமிழக-கர்நாடக எல்லையில் காரை துரத்திய காட்டு யானை: உயிர் தப்பிய பயணிகள்
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
சேலம் ஜங்ஷன் அருகே குறுகலான ரயில்வே தரைப்பாலம் 10 மணி நேரத்தில் மாற்றியமைப்பு: இன்னும் பாதியளவு பாலத்தை சீரமைக்க ஏற்பாடு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!