புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஜெய்ப்பூர்-புனேரி இன்று மோதல்
2022-01-07@ 15:51:29

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த 36வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் 18-12 என தலைவாஸ் பின்தங்கிய நிலையில், 2வது ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30-30 என சமனில் முடித்தது. 7 போட்டியில் தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, ஒரு தோல்வி, 4 டை என்று 22 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் 38-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 5வது வெற்றியை பெற்று பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த அணியின் கேப்டன் பவன்குமார் ஷெராவத் 18 புள்ளிகள் எடுத்தார். இன்று இரவு 7.30 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ், இரவு 8.30 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.
மேலும் செய்திகள்
குண்டுவெடிக்கும் பாகிஸ்தானில் எப்படி போட்டி நடத்த முடியும்?... பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கேள்வி
பாக். வீரர் ஷாகித் அப்ரிடி மகளுடன் ஷாகின்ஷா அப்ரிடி திருமணம்
டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி உள்ளார்; இந்திய அணியின் முதுகெலும்பு ஸ்ரேயாஸ் அய்யர்தான்: அஸ்வின் சொல்கிறார்
சில்லி பாயின்ட்...
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் வாங் ஸின்யு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் கர்நாடகா
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!