பொங்கல் பண்டிகையையொட்டி உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்
2022-01-07@ 14:35:15

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் பழைய தர்மபுரி, முத்துகவுண்டன் கொட்டாய், கடகத்தூர், சோகத்தூர், பாப்பாரபட்டி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதியில் கரும்பு உருண்டை வெல்லம் உற்பத்தி செய்வது பிரதான தொழிலாக இருக்கிறது. இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு ஆலையில் சுமார் 5 முதல் 10 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திராவிற்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்ப, உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில், தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உருண்டை வெல்லம் தயாரிக்க தேவையான கரும்பு தர்மபுரி மாவட்டத்திலேயே கிடைக்கிறது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ளதால், வெல்லம் உற்பத்தி சூடுபிடித்துள்ளது. தற்பொது உருண்டை வெல்லம் கிலோ ₹42க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிப்பம் ₹1260க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘கடகத்தூர், பாப்பாரப்பட்டி, சோகத்தூர் பகுதியில் 35க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் சிறு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதனை நம்பி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒருகிலோ வெல்லம் ₹52க்கு விற்கப்பட்டது. தற்போது உற்பத்தி அதிகரிப்பால், ₹42 ஆக விலை சரிந்துள்ளது,’ என்றனர்.
மேலும் செய்திகள்
என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு அரசு பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மின் தகன மேடை அமைக்க நிதியுதவி
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
திருக்கழுக்குன்றத்தில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மறைவு
மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது
செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!