கொரோனா பரவலால் மேட்டூர் அணை பூங்கா மூடல்
2022-01-07@ 14:18:11

மேட்டூர் : மேட்டூர் அணையையொட்டி மேட்டூர் அணை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் மேல் பூங்கா, கீழ் பூங்கா என்று அமைக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம். வார விடுமுறை நாட்களில் 10,000பேர் வரை கூடுவார்கள். ஆடிப்பெருக்கு போன்ற திருவிழா காலங்களில், 50ஆயிரத்திற்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் மேட்டூர் அணை பூங்காவில் மக்கள் நெரிசல் காணப்படும்.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வியாழக்கிழமையான நேற்று முதல், மறு உத்தரவு வரும் வரை, மேட்டூர் அணை பூங்கா மூடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை பூங்கா மூடப்பட்டது தெரியாமல் வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பூங்கா மூடப்பட்டதால் பூங்காவை சுற்றி உள்ள மீன் வறுவல் கடைகள், தள்ளுவண்டி கடைகள், சிற்றுண்டி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் செய்திகள்
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
ஆவடி அமமுக செயல்வீரர்கள் கூட்டம்; ஓபிஎஸ்சை ரகசியமாக சந்திக்க அவசியம் இல்லை.! டிடிவி.தினகரன் பேட்டி
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்; முத்தரசன் எச்சரிக்கை
மணப்பாறை நீதிமன்றத்தில் தொந்தரவு கொடுத்து வந்த குரங்குகள் கூண்டில் சிக்கின-பணியாளர்கள், பொதுமக்கள் நிம்மதி
துறையூர் அடுத்த பச்சைமலையில் மரவள்ளிக்கிழங்கு, முந்திரி சாகுபடி குறைவால் வாழ்வாதாரம் பாதிப்பு-மழைவாழ் மக்கள் வேதனை
திருப்பத்தூர் மாவட்டத்தில் ₹7 கோடியில் 6 கோயில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யும் பணிகள் தீவிரம்-இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தகவல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!