அதிமுக பொதுச்செயலாளர் என்று வதந்தி பரப்பியதாக சசிகலா மீது வழக்கு பதிய கோரி ஜெயக்குமார் மனு: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல்
2022-01-07@ 00:15:36

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தான்தான் என்று வதந்தி பரப்பியதாக சசிகலா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது: தான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று பொதுமக்கள் மத்தியில் சசிகலா தன்னை பிரபலப்படுத்தி வருகிறார். கட்சியின் உறுப்பினரே அல்லாத அவர் கட்சியின் கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்திவருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி எம்ஜிஆரின் சமாதிக்கு அதிமுக கொடியுடன் சென்ற சசிகலா அங்கு தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று பேட்டி அளித்துள்ளார். இதனால், சசிகலா மீது மோசடி, வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுத்து வழக்கு பதியுமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Tags:
AIADMK general secretary rumor Sasikala case Jayakumar petition அதிமுக பொதுச்செயலாளர் வதந்தி சசிகலா வழக்கு ஜெயக்குமார் மனுமேலும் செய்திகள்
பாஜக தலைமையகத்தை முற்றுகையிடுவோம்: சிவசேனா எச்சரிக்கை
வருகிற 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தீர்மானம்; எடப்பாடி முயற்சியை, சட்டப்பூர்வமாக முறியடிக்க பன்னீர்செல்வம் திட்டம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ பன்னீர் செல்வம் மனு... நேற்று மாலை தான் தனக்கு அழைப்பிதழ் வந்ததாக சாடல்!!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி : ஜெயலலிதாவுக்கு நிகராக பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க திட்டம்!!
பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு
பொதுக்குழு கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆதரவாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!