திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அருகே வாகன நிறுத்துமிடம் இல்லாததால் மாடவீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்கள்
2022-01-05@ 00:50:02

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏராளமானோர் வருகின்றனர். மேலும், அருகில் உள்ள நான்கு மாடவீதிகளிலும் 20க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த திருமண மண்டபங்களுக்கு வாகன நிறுத்துமிடம் இல்லை. முருகன் கோயில் அமைந்த ஊரில் திருமணம் செய்ய வேண்டும் என்ற வேண்டுதல் இருப்பதாலும், குறைந்த வாடகையாக இருப்பதாலும் திருப்போரூர் பகுதியில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் செவ்வாய், சனி, ஞாயிறு தினங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்த தினங்களிலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள், திருமணங்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது. அவர்கள், தங்களது வாகனங்களை நான்கு மாடவீதிகளில் சாலையோரம் நிறுத்தி விட்டு கோயிலுக்கும், திருமண மண்டபங்களுக்கும் செல்கின்றனர். மேலும், மேற்கு மாடவீதியில் திருக்குளத்தை ஒட்டி வாகனங்களை நிறுத்துவதால் இந்த பிரதான சாலையில் செல்லும் பேருந்துகள், லாரிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றன.
தெற்கு மாடவீதியில் காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், கிழக்கு மாடவீதியில் தபால் நிலையம் ஆகியவை உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், கிழக்கு கடற்கரை சாலைக்கு நெம்மேலி வழியாக செல்பவர்களும் நெம்மேலியில் உள்ள அரசு கல்லூரி, தனியார் பள்ளிகளுக்கு செல்பவர்களும் இந்த மாடவீதிகள் வழியாக செல்ல வேண்டும்.
வெளியூர்களில் இருந்து கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், கோயில் நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாகனம் நிறுத்த இடம் ஒதுக்கவில்லை. இதனால், பலரும் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். தொடரும் இந்த போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க, கோயில் நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து தனி வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, பார்க்கிங் வசதி இல்லாத திருமண மண்டபங்களுக்கு அனுமதி வழங்குவதை, பேரூராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்