புல்லிபாய் செயலி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?.. அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி காவல் ஆணையருக்கு உத்தரவு
2022-01-04@ 14:59:30

டெல்லி: புல்லிபாய் செயலி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டெல்லி காவல் ஆணையரிடம் சிறுபான்மையினர் நலவாரியம் அறிக்கை கேட்டுள்ளது. முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளங்களில் இருந்து எடுத்து புல்லிபாய் உள்ளிட்ட செயலிகள் பதிவேற்றம் செய்தன. முஸ்லீம் பெண்களை ஏலம் விடுவதாகவும் அந்த செயலிகள் அறிவிப்பு வெளியிட்டு சர்ச்சைகள் ஏற்படுத்தின. முஸ்லீம் பெண்களை அவதூறு செய்யும் விதமாக செயல்பட்ட இந்த செயலிகள் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பொறியியல் மாணவர் ஒருவரை பெங்களுருவில் மும்பை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் புல்லிபாய் செயலி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டெல்லி சிறுபான்மையினர் நலவாரியம் காவல் ஆணையர் ராகேஷ் அதானாவிடம் அறிக்கை கேட்டுள்ளது. முஸ்லீம் பெண்களின் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறியுள்ள சிறுபான்மையினர் நலவாரியம் பிரச்சனையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு வருகிற 10ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் டெல்லி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 17,070 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி... 23 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை
‘ஆதார்-பான்’ எண் இணைக்காவிட்டால் இன்று முதல் இரு மடங்கு அபராதமாக ரூ.1000 கட்ட வேண்டும்!!
ஒருபக்கம் போராட்டம்.. மறுபக்கம் குவியும் விண்ணப்பம்! .. அக்னிபாதை விமானப்படையில் சேர ஒரே வாரத்தில் 2.72 லட்சம் பேர் விருப்பம்!!
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தேர்தல் நிதி பத்திரங்கள் இன்று முதல் விற்பனை; ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18ம் தேதி துவக்கம்; ஆகஸ்ட் 12 வரை நடக்கும்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்