கரூர் மாநகராட்சி பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை
2022-01-04@ 14:21:09

கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் ஒருங்கிணைந்த நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வார்டு பகுதிகளில் நகரப்பகுதிகளை தாண்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிகளவு சுற்றித்திரியும் தெரு நாய்களின் அட்டகாசம் காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதியை சந்தித்து வருகின்றனர்.
இரவு நேரத்தில் வேலை முடிந்து நடந்து செல்லும் பொதுமக்கள் நாய்களின் தொந்தரவு காரணமாக மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு சில மாதங்கள் மட்டுமே இவை நடைமுறையில் இருந்தது. அதற்குப்பிறகு இந்த முறை பின்பற்றாத காரணத்தினால் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.எனவே, பொதுமக்கள் நலன்கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும் செய்திகள்
காரியாபட்டி அருகே 1,100 ஆண்டு பழமையான சமண பள்ளி கண்டுபிடிப்பு
தமிழக-கர்நாடக எல்லையில் காரை துரத்திய காட்டு யானை: உயிர் தப்பிய பயணிகள்
முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியால் இரு கிராமத்தினர் இடையே மோதல்: இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
சேலம் ஜங்ஷன் அருகே குறுகலான ரயில்வே தரைப்பாலம் 10 மணி நேரத்தில் மாற்றியமைப்பு: இன்னும் பாதியளவு பாலத்தை சீரமைக்க ஏற்பாடு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!