தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வோர் கண்காணிப்பு நெல்லை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிரடி சோதனை
2022-01-04@ 12:04:50

நெல்லை : ரயில்களில் எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வோரை கண்காணிக்கும் வகையில் நேற்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்ப நாய் பிரிவினர் அதிரடி சோதனை மேற்ெகாண்டனர்.தென்மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளிடம் ரயில் பயணங்கள் குறித்து போதிய விழிப்புணர்வை மேற்கொள்ள மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அன்பரசு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக எளிதில் தீ பற்றும் பொருட்களான பட்டாசு, மண்ணெண்ணெய், கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்வோரை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் கிரண், மதுரை கோட்ட மோப்பநாய் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நெல்சன் மற்றும் குழுவினர் ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தி, தீ பற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணித்தனர். மேலும் ரயில் நிலையம் முழுவதும் மோப்பநாய் சோதனையும் நடந்தது. தீ பற்றும் பொருட்களை கொண்டு செல்வதால், ஏற்படும் ஆபத்துக்களை விளக்கி துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர். சுமார் 6 மணி நேரம் நெல்ைல ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் மற்றும் பிளாட்பார்ம்களை சோதனையிட்டு பரிசோதித்தனர்.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்